தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இந்நிலையில், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.