தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் மக்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்த நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது.

தற்போது அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்ட நிலையில் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவு இல்லாத ரயில் உள்ளிட்ட மூன்று சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளிலும், மறு மார்க்கமாக நெல்லையிலிருந்து ஜனவரி 15 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் ஜன் சதர்ன் விரைவு ரயில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.