தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மக்கள் பேருந்துகளில் அச்சமின்றி பயணிக்கலாம் என்று MTC – யின் பொது மேலாளர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் தடை இன்று இயக்கப்படுவதாக கூறிய அவர் தற்போது வரை சென்னையில் 2000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.