விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நீண்ட காலம் மனைவியை பிரிந்து வாழும் கணவர் வேறொருபெண்ணுடன் உறவில் இருந்தால், மனைவியை கொடுமைப்படுத்துவதாக கருதி, விவாகரத்துக்கான முகாந்திரமாக எடுத்துக்கொள்ள முடியாது என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நீண்ட காலம் மனைவியை பிரிந்திருந்த கணவர், வேறொரு பெண்ணுடன் வாழ்வதன் மூலம், அமைதியையும் ஆறுதலையும் பெற்றிருக்கலாம் எனவும் கருத்து கூறியுள்ளது