ஜார்க்கண்ட் மாநிலம் மகேஷ்வர் கிராமத்தைச் சேர்ந்தவர் நஜிபுல் ஷேக், இவரது மனைவி ஷகினா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலைக்காக ஜார்க்கண்டில் இருந்து இருவரும் சென்னை வந்துள்ளனர். வேலை செய்யும்  இடத்தில் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சித்தாரா என்பவருடன் ஷகினாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நஜிபுல் ஷேக் காலை பணிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனைவி காணவில்லை. இதனை அடுத்து தனது இரண்டு குழந்தைகளுடன் காவல் நிலையத்திற்கு சென்ற நஜிபுல் ஷேக் ஓடிப்போன தனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என புகார் அளித்துள்ளார்.