விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் புதுவித தலைப்புடன் விவாதம் நடைபெற்ற வரும் நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சி தற்போது வெளியாகி மக்களை கவர்ந்துள்ளது. அதாவது இந்த வாரம் கணவர் பணம் என் பணம் மற்றும் பெண்களுக்கு என்று தனியாக பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பெண்களின் ஒரு தரப்பினர் கணவர் பணம் தன்னுடைய பணம் என்று கூறி வாக்குவாதம் செய்தனர். ஆனால் மற்றொரு தரப்பினர் கணவரிடம் கடன் வாங்கினால் அதனை அடுத்த மாதமே திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று கூறியுள்ளார். கணவர் 100 ரூபாய் கொடுத்துவிட்டு அதனை 100 தடவை கணக்கு கேட்பார் என்று பெண் ஒருவர் கொந்தளித்த நிலையில் மற்றொரு தரப்பிலிருந்து கணக்கு கேட்பதில் என்ன தவறு? அதனை நாம் சொல்வதில் என்ன கஷ்டம் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு கோபிநாத் எந்த ஒரு பதிலும் அளிக்க முடியாமல் அப்படியே நிற்க தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.