தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் பரத் பாலா இயக்கத்தில் நடித்த திரைப்படம் தான் மரியான். இந்த திரைப்படம் வெளியாகி தற்போது பத்து வருடங்கள் நிறைவடைந்து விட்டது. ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடலுமே பட்டித் தொட்டி எல்லாம் ஒலித்தது. இந்நிலையில் 10 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பரத் பாலா, தனுஷ் மற்றும் ஏ ஆர் ரகுமான் ஆகியோர் இன்ஸ்டாகிராம் லைவ் வந்து பேசினர்.

அப்போது மரியான் போன்ற காதல் கொண்ட திரைப்படங்களில் நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் அதை நாங்கள் பார்க்க வேண்டும் என்று பரத் பாலா தெரிவித்தார். அதனைக் கேட்ட தனுஷ் சிரித்துக்கொண்டே எனக்கு 40 வயதாகி விட்டது இனி காதல் படம் எல்லாம் செட் ஆகாது, அடுத்த தலைமுறை நடிகர்கள் பண்ணட்டும் என்று கூறினார். இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.