இங்கிலாந்தின் மான்செஸ்டர் சேர்ந்த அனிகோ ரோஸ் என்ற 42 வயது பெண் ஒருவர் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் போல கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார். மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவரை கட்டிப்பிடித்தால் மன உளைச்சலில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. அதனால் தான் இந்த பெண்ணுக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

தற்போது இவர் ஒரு மணி நேரத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 7400 வசூலிக்கிறார். சிலர் இந்த அமர்வை நீட்டித்து கூடுதல் பணம் கொடுத்து தங்களுடைய மன அழுத்தத்தை போக்கிக் கொள்கிறார்கள். இதற்காக நேரம் கணக்கில் எடுத்து கூடுதல் பணம் வசூல் செய்யப்படுகிறது.