இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது தொடர்கதையாகி வரும் நிலையில் இன்று தமிழக முதல்வர்  ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, மீனவர்கள்பிரச்சனை குறித்து கடிதம் எழுதி இருந்தார். இதற்கிடையில், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிக்கு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 19 மீனவர்களை, எல்லைத் தாண்டினார்கள் என காரணம் காட்டி கைது செய்துள்ளது இலங்கை கடற்படை. அவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.