பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் இன்று பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் இந்த முகாம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும் எனவும் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் முகாம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.