ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஐந்து பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஐவரில் ஒருவரான அகில் என்ற மாணவர் அலைகளில் சிக்கி மாயமாகியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த கடற்கரை காவல் படையினர் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை மாணவர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.