இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி ஆனது நிதி நிலைமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நிலைமை சீரானதும் அகவிலைப்படி மீண்டும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் நிலுவை தொகை வழங்கப்படவில்லை.

இதனை வழங்க வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்ற நிலையில் அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக வரஇருக்கும் 2024 ஆம் வருடம் 18 மாத கால அகவிலைப்படி நிலுவை தொகை வந்து சேரும் எனவும் இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுவதால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.