கடன்களை வசூலிக்கும் போது அதற்கான கட்டணங்கள் பற்றி வெளிப்படைத்தன்மை தேவை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மாறுபட்ட வட்டி விகிதத்தில் இருந்து நிலையான வட்டி முறைக்கு மாறும்போது கட்டணத்தில் வெளிப்படை தன்மை தேவை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மறைமுக கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
தவணை தொகை அல்லது செலுத்தும் கால அளவை வாடிக்கையாளர் விருப்பப்படி மாற அனுமதிக்க வேண்டும் என்றும், அபராதம் என கூடுதலாக வசூலிக்காமல் விதிமுறைக்குட்பட்ட கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.