இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ஷர்துல் தாகூர், இதற்கான பின்னணி காரணத்தை விவரித்துள்ளார். “எனக்கு ‘எஸ்.எஸ்’ பேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் உள்ளது. அதன் உரிமையாளர் ஜதின் சரீன் எனக்கு எப்போதும் மிகச் சிறந்த தரம் வாய்ந்த பேட்களை அனுப்பி வைப்பார்.
ஒருமுறை ரோஹித் பாய் எனது பேட்டைப் பார்த்துவிட்டு அது மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறி, தனக்கும் சில பேட்களைத் தருமாறு கேட்டார். நானும் மகிழ்ச்சியோடு அவருக்கு பேட்களைக் கொடுத்தேன். இன்று அதே பேட்டைப் பயன்படுத்தி லார்ட்ஸ் போன்ற வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் ரோஹித் சதம் அடித்து சாதனை படைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என்று ஷர்துல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆட்டத்தின் போது ரோஹித் சர்மா தசைப்பிடிப்பு காரணமாகச் சிரமப்பட்டதாகவும், அதன்பின்னரே பெரிய ஷாட் அடிக்க முயன்று ஆட்டமிழந்ததாகவும் ஷர்துல் குறிப்பிட்டார். ரோஹித் களத்தில் இன்னும் 5 ஓவர்கள் நிலைத்து நின்றிருந்தால், போட்டியின் முடிவே முற்றிலும் மாறியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
எது எப்படியோ, லார்ட்ஸ் மைதானத்தில் புதிய வரலாறு படைத்துள்ள ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மாவின் இந்த இன்னிங்ஸ், அவரது திறமையையும் கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பையும் மீண்டும் உலகிற்கு உரக்க நிரூபித்துக் காட்டியுள்ளது.
