மலையாள மக்களின் மிக முக்கியமான பண்டிகையான “ஓணம்” பண்டிகை ஆக.29ல் கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊரான கேரளாவிற்கு செல்வது வழக்கம். இந்த நிலையில்  சென்னையிலிருந்து கேரளாவின் பல பகுதிகளுக்கு செல்லும் விமான கட்டணம் 7 மடங்கு வரை உயர்ந்துள்ளது.

அந்த வகையில் , சென்னை-திருவனந்தபுரம் (பழைய கட்டணம் ரூ. 3,225, புதிய கட்டணம் ரூ.10,945-ரூ.19,089), சென்னை-கொச்சி (ப.க. ரூ.2,962, பு.க. ரூ. 6,361-ரூ.10,243), சென்னை-கோழிக்கோடு (ப.க. ரூ.3,148, பு.க. ரூ.5.914-ரூ21,228) அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.