உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். திருப்பதி திருமலை சாலை மார்க்கமாகவும் மலை பாதை வழியாகவும், பாதயாத்திரை வண்ணம் இருக்கிறார்கள். இந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலிலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவான ஒய்.வி சுபாஷ் ரெட்டி தொடர்ந்து இரண்டு முறையாக பதவி வகித்து வந்தார் .

இந்நிலையில் அவருடைய பதவிக்காலமானது எட்டாம் தேதியோடு முடிவடைந்த நிலையில் தற்பொழுது திருப்பதி எம்எல்ஏ பூமனா கருணாகர் ரெட்டி திருப்பதி தேவஸ்தான ஆட்சி மன்ற குழுவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.