திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் நோக்கி அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. இந்த பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டி சென்ற நிலையில் முருகேசன் என்பவர் நடத்துனராக இருந்துள்ளார். இந்தப் பேருந்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது நடத்துனர் அமர்ந்திருந்த இருக்கை திடீரென கழன்று சாலையில் விழுந்தது. இதில் நடத்துனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஓட்டுனர் பேருந்து நிறுத்தினார்‌‌. இதைத்தொடர்ந்து நடத்துனரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த வேறொரு பேருந்தில் பயணிகளை ஓட்டுனர் ஏற்றி அனுப்பி விட்டு சாலையில் கிடந்த இருக்கையை எடுத்துக்கொண்டு பணிமனைக்கு சென்று விட்டார். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.