சென்னையில் ஓடும் அரசு பேருந்தின் பலகை உடைந்து பெண் பயணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலேவரு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் இலவசப் பேருந்து என்ற பெயரில் தரமற்ற பேருந்துகளை இயக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளார். அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பெரும்பாலானவை தரமற்ற முறையில் உள்ளன. ஏற்கெனவே உள்ள பேருந்துகளுக்கு உரிய தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளவும் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.