சென்னையில் இயங்கி வரும் மாநகர பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதன் காரணமாக சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள் பலர் அவ்வப்போது தவறி கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 7 வருடங்களில் மாநகர பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்து விபத்தில் சிக்கி 24 பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகச் சென்னை போக்குவரத்துத்துறை காவல்துறை X தளத்தில் தகவல் அளித்துள்ளது. இதனை தடுக்க பேருந்துகளில் தானியங்கி கதவுகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.