நடிகர் விஜய்யை தொடர்ந்து, நடிகர் விஷாலும் புதிய கட்சியை தொடங்கவுள்ளார் எனறும், நற்பணி மன்றம் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வந்த விஷால் இன்று காலை 10 மணிக்கு கட்சி பெயர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் தனது மக்கள் பணி இயக்கத்தின் மூலம் பணி தொடரும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.