அதன்படி தற்போது சென்னையில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்த மியான்மரின் ஆங்கில ஆசிரியர் ஒருவரின் ஆங்கிலம் கற்கும் வீடியோ வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது. மியான்மரில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய மெர்லின் என்ற எண்பத்தொரு வயது பாட்டி திருமணத்திற்கு பிறகு இந்தியா வந்துள்ளார்.

இவரின் கணவரின் மறைவுக்குப் பிறகு உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் சென்னையில் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்த நிலையில் ஒரு வாலிபர் இவரை சந்தித்துள்ளார். அப்போது இவரின் ஆங்கிலம் பேசும் திறமையை பார்த்து ஆச்சரியமடைந்த அந்த நபர் உதவி செய்யும் நோக்கத்தில் ஆங்கிலம் கற்பும் வீடியோவை உருவாக்க உதவுமாறு கேட்டுள்ளார். இதற்காக பணம் தருவதாகவும் அந்த இளைஞர் உறுதி அளித்த நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Merlin இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@englishwithmerlin)