பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டிருப்பதால் மனிதர்கள் அருகில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிப்படுத்தி விடும். அதுவே சில நேரங்களில் சமையலறை மற்றும் வாகனங்கள் என பலவற்றில் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அடிக்கடி நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதனை சிலர் வேடிக்கையாக கையில் எடுத்து விளையாடுவதையும் அதன் மீது படுத்து உறங்குவதையும் வீடியோவாக பார்த்து வருகிறோம். உலக அளவில் கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது பிளாக் மாம்பா. கருப்பு மாம்பா என்று அழைக்கப்படும் இந்த பாம்பை நபர் ஒருவர் பிடிப்பதற்கு முயற்சி செய்கின்றார். ஆறு முதல் ஏழு அடி வரை வளரும் இந்த பாம்பு தன்னை பிடிக்க வந்த நபரை எதிர்த்து தாக்குவதற்கு வந்துள்ள நிலையில் அந்த நபர் நூலிலையில் தப்பித்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Dingo Dinkelman இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@dingo_dinkelman)