பெரும்பாலும் மக்கள் நீண்ட தூரப்பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். இந்த நிலையில் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது ரயிலில் பயணம் செய்தவர்களுடைய பட்ஜெட் பொறுத்து ஏசி ஸ்லீப்பர் மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் டிக்கெட் புக்கிங் செய்யப்படுகிறது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கு டிக்கெட் புக்கிங் தேவை கிடையாது இந்த பெட்டிகளில் டிக்கெட் கட்டணம் மிகக் குறைவு. ஏராளமானவர்கள் ஒரே டிக்கெட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரயிலில் பயணம் செய்கிறார்கள்.

ஆனால் ஒரு ரயிலின் ஜெனரல் கோச்சில் இருந்து இறங்கிய பிறகு எத்தனை ரயில்களில் ஜெனரல் கோச்சில் பயணிக்கலாம் என்று பலருக்கும் தெரிவதில்லை. அதற்கும் விதிமுறை இருக்கிறது. ரயிலில் பயணத்தின் போது பலர் வழியில் உள்ள ஏதேனும் உள்ள ரயிலில் செல்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் அங்கே இறங்கி பின்னால் வரும் மற்றொரு ரயில்லில் ஏறி கொள்கிறார்கள். இதை செய்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ஆனால் ரயில்வே விதிவிலின்படி ஒரு ரயிலில் இறங்கி மற்றொரு ரயிலில் பொது டிக்கெட்டில் பயணம் செய்வது குற்றம் எந்த ரயிலில் டிக்கெட் எடுத்தீர்களோ அதே ரயிலில் பயணம் செய்வது செல்லுபடியாகும்.

வேறொரு ரயிலில் பயணம் செய்யும்பொழுது டிக்கெட் பரிசோதனையின்பொது டிக்கெட்டில் முரண்பாடு இருக்கும் பட்சத்தில் பிரச்சினையை சந்திக்க நேரிடும். அவர் உங்களுக்கு அபராதம் விதிக்கலாம். அதேபோல டிக்கெட் வாங்கும் ஸ்டேஷனில் ஸ்டேஷனில் பெயர், நேரம் எழுதப்பட்டிருக்கும். இதிலிருந்து நீங்கள் எந்த ரயிலுக்கு டிக்கெட் எடுத்தீர்கள் என்பது தெளிவாக தெரிந்து விடும். எனவே வேறொரு ரயில்லில் பயணம் செய்தால் அதனை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.