“அடல் பென்ஷன் யோஜனா” திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் முதுமை காலத்தில் பணத்தை பற்றிய கவலை இல்லாமல் வாழலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 18 வயது முதல் ஒரு நாளைக்கு ரூ.7 என்ற அடிப்படையில் மாதம் ரூ. 210 முதலீடு செய்தால் முதுமையில் ரூ.1000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம்.

18 முதல் 40 வயது வரை முதலீடு செய்து வந்தால், 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கும். அருகில் உள்ள தபால் அலுவலகம், வங்கிகளுக்கு சென்று திட்டத்தின் கணக்கினை தொடங்கலாம்.