மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. அதேசமயம் ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை 76 ஆயிரம் போலி இணைய தளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் எட்டு லட்சம் பேர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். பெரும்பாலான மோசடிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நடந்துள்ளன. வங்கி அட்டை விவரங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை மோசடிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.