உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரில் டெல்லி-மீரட் விரைவு சாலையில் ஒரு வாலிபர் புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்த நபர் ஹெல்மெட் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் புல்லட் பைக் ஓட்டியதோடு ஒரு கையில் பீர் பாட்டிலையும் வைத்திருந்தார். இதை அவ்வழியே சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட வாலிபருக்கு போக்குவரத்து காவல்துறையினர் ரூ. 31,000 அபராதம் விதித்தனர். அதன் பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் புல்லட் பைக் அசால்த்பூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் குமார் என்பவருக்கு சொந்தமானது என்பதும், வண்டியை ஓட்டியது சுரேந்திர குமார் என்பதும் தெரிய வந்தது. மேலும் வண்டியை ஊட்டிய சுரேந்திர குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.