உத்தரப்பிரதேசம் ஜான்சி நகரில் வசித்து வருபவர்கள் சனாகான் மற்றும் சோனா ஸ்ரீவத்சவா. பெண்களான இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து காதலிக்காக ஆணாக மாறும் முடிவை சனாகான் எடுத்திருக்கிறார். அந்த வகையில் ஆஸ்பத்திரியில் அறுவைசிகிச்சை செய்து சனாகான் ஆணாக மாறிவிட்டார். அதன்பின் சனாகான் தனது பெயரை சுஹைல்கான் என மாற்றிக் கொண்டார்.

கடந்த 2017-ம் வருடம் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சோனா ஸ்ரீவத்சவாக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிய வருகிறது. நள்ளிரவில் சுஹைலைகானை அருகில் வைத்துக் கொண்டே ஆண் நண்பருடன் சோனா கதையடித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி கேட்டதற்கு, சுஹைல் கானை வீட்டு விட்டு வெளியேறுமாறும், மீண்டும் பெண்ணாக மாறி வருமாறும் சோனா கூறியதாக கூறப்படுகிறது. அதன்பின் இருவரும் தனித் தனியாக வாழத் துவங்கினர்.

இதனிடையில் சோனாவால் கைவிடப்பட்டு நடுவீதிக்கு வந்த சுஹைல்கான், தன் காதலியை மீண்டும் சேர்த்து வைக்கும்படி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார். வழக்கில் ஆஜராக சொல்லி சோனாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அதனை அவர் உதாசீனப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து சோனா ஸ்ரீவத்சவாக்கு பிடிவாரண்டு உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

பின் சோனா ஸ்ரீவத்சவா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதற்கிடையில் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி மாதத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில், சோனாவால் தனக்கு ஆபத்து உள்ளதாகவும், அவர் தரப்பில் சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சுஹைல்கான் புகார் அளித்துள்ளார்.