தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இப்பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர்.

ஏற்கனவே ரேஷன் கடைகளில் பணிச்சுமை அதிகம் இருப்பதால் மகளிருக்கான 1000 வழங்கும் பணிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணிச்சுமை கடுமையாக அதிகரிக்கும் என்பதால் ஒரு கார்டுக்கு 35 ஊக்கத் தொகை கேட்கின்றனர்.