தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆர்கே நகர் தேர்தலில் ஒரு வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தனர், ஐந்து பேர் உள்ள குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள், நான் ஒன்றுமே கொடுக்கவில்லை, ஆர்.கே நகருக்கு நான் தான் வேண்டும் என்று கூறி வாக்களித்தார்கள்.

ஜெயலலிதா வீட்டு பையன் என்பதால் எனக்கு வாக்களித்தனர் என்று நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.