தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி அனைத்து வகுப்புகளுக்கும் சனிக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்வுகள் நடத்தப்படும். இறுதியாண்டில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான வகுப்புகள் அடுத்த வாரம் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.