தமிழகத்தில் அதிக கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் குமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் நிவாரணப் பொருட்களை கட்டணம் இல்லாமல் அனுப்பலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிவாரண பொருட்களுக்கு பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.