ஒடிசா ரயில் விபத்தில் தற்போது வரை தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றும் விபத்தில் காயம் அடைந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்ற தகவல் வெளியானது. ரயில் விபத்தில் உயிரிழந்தோ எண்ணிக்கை தற்போது 294 ஆக அதிகரித்துள்ளது. ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் குழுவை அங்கேயே தங்கி இருந்து தொலைந்தவர்களை கண்டுபிடிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோய் இருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீல முடியவில்லை என்ற முதல்வர் வேதனை தெரிவித்தார். மேலும் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என தெரிவித்தார்.