கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கோரமண்டலம் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டதில் பலரும் சிக்கி இருப்பதால் இதுவரை பலி எண்ணிக்கை 207 ஆக உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுப்பகுதியில் ஏற்பட்ட இந்த ரயில் விபத்தில் ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜனா தெரிவித்துள்ளார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இந்நிலையில் ஒடிசா  ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து அறிய ஒரு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி 1070 என்ற இலவச என்னிலும், 9445869843 என்ற மொபைல் எண்ணிலும், 9445869848 என்ற whatsapp எண்ணிலும், 044-285593990 என்ற தரை வழி என்னிலும் தொடர்பு கொண்ட தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.