ஒடிசாவில் நேற்று முன் தினம் இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெரும்பாலான பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் தமிழக பயணிகளையும் அரசு பத்திரமாக மீட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டு பயணிகள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என்று ஒடிசாவில் நேரடியாக ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொடர்பு கொள்ள முடியாத எட்டு பேரில் 2 பேர் வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள ஆறு பேரும் பாதுகாப்பாக இருப்பதாக சக பயணிகள் தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.இதன் மூல ஒடிசாவின் கோர ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.