போடியிலிருந்து சென்னை மற்றும் மதுரைக்கு வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் அகல ரயில் பாதையில் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் போடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இதனை தொடர்ந்து வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் போடி – மதுரை மற்றும் சென்னை இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவை ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. இதனை மத்திய இணை அமைச்சர் முருகன் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.