ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த நிலையில் இந்த விபத்து தவிர கடந்த 20 ஆண்டுகளில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மூன்று முறை விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆந்திராவில் உள்ள நெல்லூரில் ஒரு விபத்தை சந்தித்தது.

அதனைப் போலவே 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி ஒடிசாவின் ஜெய்ப்பூரில் மற்றொரு விபத்தை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக விபத்தில் சிக்கியுள்ள இந்த ரயிலில் பயணித்த 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.