உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் அமைந்துள்ள பிருந்தாவனத்தில் எப்போதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். அதே போன்று இங்கு குரங்குகளும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் உடமைகளை அந்த குரங்குகள் தூக்கிச்செல்வது வழக்கம். அந்த வகையில் ஒருவரின் ஐபோனை குரங்கு ஒன்று தூக்கி சென்றுள்ளது.

அதனை எப்படி அந்த குரங்கிடம் இருந்து வாங்குவது என ஐபோன் உரிமையாளர் முழித்து கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்த மற்றொரு நபர் பிருந்தாவனத்தில் மதில் சுவர் மேல் அமர்ந்திருந்த குரங்கிற்கு குளிர்பான பாட்டிலை தூக்கிபோடுகிறார். உடனே அத்தனை பிடித்துக்கொண்டு ஐபோனை விட்டுவிட்டது குரங்கு. இந்த வீடியோ வைரலாகிவருகிறது.