![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/05/1252693.jpg)
சென்னை சேப்பாக்கத்தில் மே 26 இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியை காண வரும் பார்வையாளர்கள் தங்களது ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிந்த பிறகு அண்ணா சதுக்கம், சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, ஓமந்தூரார் மருத்துவமனை ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.