திருவண்ணாமலை அருகே ஏலச்சீட்டு தீபாவளி சீட்டு நடத்தி ஐந்து கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதி தலைமறைவாகினர். அரசு பள்ளி ஆசிரியை உண்ணாமலை அவரது கணவர் ராணுவ வீரரான செல்வம் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஏராளமானவரிடம் ஒரு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து ஏல சீட்டு நடத்தியும் 500க்கும் மேற்பட்டவர்களிடம் ஆயிரம் கணக்கில் பணம் வசூல் செய்து தீபாவளி சீட்டு நடத்தியுள்ளனர். அனைவருக்கும் முதிர்வுத் தொகை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததும் வீட்டிற்கு சென்று பணம் கேட்டால் ராணுவ வீரரான செல்வம் மிரட்டல் கொடுப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.