கடலூர் அடுத்த சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தில் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் தேவதாஸ் மற்றும் அன்பு ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்ற போது அன்பு வராததால் தேவதாஸ் தலைவராக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடந்ததாக அன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து நேற்று மீண்டும் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக அங்குள்ள கோவில் ஒன்றில் திரண்ட கிராம மக்கள் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். சம்பவ இடத்தில் காவல்துறையினர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.