தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணியை பாஜக இறுதி செய்யாத நிலையில் புதுக்கோட்டையில் அக்கட்சியினர் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட போஸ் நகரில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினர் அங்கிருந்து தாரை தப்பட்டைகளுடன் ஊர்வலமாக சென்று தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டினர். அப்போது பத்துக்கு அதிகமான இளைஞர்கள் தாமரை மற்றும் பிரதமர் மோடியின் பெயரை பச்சை குத்தி கொண்டனர். காந்தியின் நினைவு தினத்தில் பாஜகவினர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இடத்திலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.