ஈரோடு அருகே உள்ள பவானி நகராட்சியோடு ஆண்டிகுளம் குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சிகளை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பவானி நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லை என்று கருதி இரண்டு ஊராட்சிகளை இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் குடிநீர், வீட்டு வரி உயரும் 100 நாள் வேலை வாய்ப்பு குறையும் என்று கூறி தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.