கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லக்கசந்திரம் கிராமத்தில் இருக்கும் துலுக்கான் ஏரி மூலம் சுற்று வட்டார பகுதிகளில் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணிக்காக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஏரிக்கரையின் ஒரு பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் 10 அடி ஆழம் குழி தோண்டி தண்ணீரை வெளியேற்றியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இதுகுறித்த தாசில்தாா் சரவணமூர்த்திக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரனிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த சம்பவம் விவசாயிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.