ஜே இ இ முதன்மைத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் வருகின்ற ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் நடைபெற்ற முதன்மை தேர்வின் முதல் பகுதி மற்றும் சமீபத்திய தேர்வுகளில் பெற்ற சிறந்த மதிப்பெண்களின் அடிப்படையில் ரேங்க்குகள் ஒதுக்கப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இதில் கட் ஆஃப் மதிப்பெண்கள் முடிவு செய்யப்பட்ட சுமார் 2.50 லட்சம் பேர் JEE அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். அட்வான்ஸ் தேர்வு வருகின்ற ஜூன் நான்காம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.