இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து வங்கிகளும் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் முழு மாதத்திற்கான வங்கி விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வங்கி பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு மக்கள் விடுமுறை விவரம் குறித்து அறிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • ஏப்ரல் 1: நிதியாண்டின் இறுதியில் வங்கிக் கணக்குகள் மூடப்படுவதால் வங்கிகளுக்கு விடுமுறை.
  • 5 ஏப்ரல்:  ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் தெலுங்கானாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • 7 ஏப்ரல்: ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு வாராந்திர விடுமுறை.
  • 9 ஏப்ரல்:  பேலாப்பூர், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • 10 ஏப்ரல்: கொச்சி மற்றும் கேரளாவில் வங்கிகள் விடுமுறை.
  • 11 ஏப்ரல்:  நாடு முழுவதும் வங்கிகள் விடுமுறை.
  • 13 ஏப்ரல்: இரண்டாவது சனிக்கிழமையன்று வங்கிகள்விடுமுறை.
  • 14 ஏப்ரல்: ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு வாராந்திர விடுமுறை.
  • 15 ஏப்ரல்: ஹிமாச்சல் தினத்தையொட்டி கவுகாத்தி மற்றும் சிம்லா மண்டலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • 17 ஏப்ரல்:  அகமதாபாத், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், காங்டாக், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, பாட்னா, ராஞ்சி, சிம்லா, மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை .
  • 20 ஏப்ரல்:  அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • 21 ஏப்ரல்: ஞாயிற்றுக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு வாராந்திர விடுமுறை.
  • 27 ஏப்ரல்: நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை.
  • 28 ஏப்ரல்: ஞாயிற்றுக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு வாராந்திர விடுமுறை.