முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மாலை மதுரை வந்தடைந்தார். அங்கு செய்தியாளர் சந்தித்த அவர், பாஜக கட்டாயமாக ஜெயிக்கும். நான் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

ஏற்கனவே ஆறு தடவை ஜெயித்துள்ளேன். மதுரையிலும் ஒரு தடவை ஜெயித்துள்ளேன். இந்த முறை நான் சீட் கேட்கவில்லை. அவசியம் ஏற்பட்டால் ராஜ்யசபா எம்.பி. பதவி கேட்பேன். மோடி ஏற்கனவே இரண்டு முறை பிரதமராக இருந்துள்ளார் இப்போது அவர் வருவாரா என கூற முடியாது என்றார்.