உத்தரபிரதேச மாநிலம் மைன்புரியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இரண்டு சகோதரர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், தம்பியின் மனைவி அழகாக இருந்ததால் அண்ணன் சபல புத்தியால் கொலை செய்யும் அளவுக்கு வெறிபிடித்தவராக மாறியுள்ளார். தம்பி மனைவி மீதான மோகத்தால், அவர் தனது தம்பியை டிராக்டர் ஏற்றிக் கொன்று, பின்னர் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர் தனபால் என்பதை உறுதி செய்தனர். கொலை செய்யப்பட்டவரின் மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.