எல்ஐசி ஊழியர்களின் ஊதியத்தை 17 சதவீதம் உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வால் 1.10 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த ஏறக்குறைய 24 ஆயிரம் ஊழியர்களின் ஓய்வூதிய பங்கு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் எல்ஐசி தெரிவித்துள்ளது.