நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணையை இன்று மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையையும் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.