நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வை நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரை ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் இறுதி தேர்வை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு தேர்வு தேதியில் மாற்றம் இருக்கலாம். குறிப்பாக ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் இறுதி தேர்வை முடித்து முன்கூட்டியே விடுமுறை அதாவது 10 நாட்கள் கூடுதல் விடுமுறை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.